நீ வேண்டும்
நான் என்பவன் மிகவும் பலவீனமானவன்,
நான் ஒரு உணர்வுக் கோழை,
என்னால் தனியாக இந்த வாழ்க்கையை வாழ முடியாது...
வாழவே முடியாது...
அவன் நேசிப்பதற்க்கும்,
அவன் நேசிக்கப்படுவதற்கும் நீ வேண்டும் என்ற பைத்தியக்காரத்தனம் எனக்கு எப்போதும் உண்டு...
ஏதேனும் நோய் (கோபம் ) வந்து படுத்து விட்டாள் பக்கத்திலும் உட்கார்ந்து பார்த்துக்கொள்ள நீ வேண்டும்....
ஏதேனும் தோல்வி வந்து விட்டால் விடுடா பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லவும் நீ வேண்டும்....
Comments
Post a Comment